April 16, 2015

விபூதி

உனக்கு பழக்கமில்லாத
விபூதியை பூசிக் கொள்கிறேன்,
உன் உடைகளை கலைத்த
இரவின் கனவின் பின்....
உன் கலைந்த உடையே
என் கலையாத கனவுகள்..
உடுத்திய வெள்ளை
உடைகளை கலைத்த
தேவதை நீ!!!
விரல்களை நீட்டி
என் கண்களை மூடி
இதழ்களையும் மூடுகிறாய்
உன் இதழ்களால்...
நிர்வாணமாய் நீ
குளித்த இரவில்
இன்னொரு முறை
நீந்தி பார்க்கிறேன்
கனவு என்று தெரிந்த
நினைவில்...

No comments:

Post a Comment