April 16, 2015

2015 கவிதைகள் 601 to 610

என்னை விட
என் தேவதை
அழகாக
கவிதை எழுதுகிறாள்
என் கன்னங்களில்...        601

நீ
என் இதழில்
பாட தொடங்கியதுமே
நான்
என் கண்களை மூடி
ரசிக்க தொடங்க விடுகிறேன்.. 602

முழுமையடைந்த
இரவில்
நீ
உன் உடையை
களைவதை போல தான்
நான்
என்னிலிருந்து
என் காதலை களைக்கிறேன்
முழுமையடைந்த
ஓர் கவிதையை எழுத...   603

தூரங்கள் இருந்தாலும்
நேரங்கள் கழிந்தாலும்
நீயே
என்னை நெருங்கி இருக்கிறாய்
என் மடியில் தவழ்ந்த படி... 604

மேகத் தீ
குறையும் போது
மோகத் தீ
எரிகிறது
இந்த காதல் உடலில்..    605

என்னிலிருந்து
பிறக்கும்
எந்த கேள்விக்கும்
பதில்- உன் முத்தம்....      606

உன் இருப்பை
என்னுள் உணர்ந்தே
என்னுள் பிறக்கிறது
இந்த காதல் கவிதை...   607

உன்
ஒரே ஒரு
தொடுதல் போதும்
என்னை நீ தேடும்
கவிதை நான் எழுத...   608

வேகம் கூடிய காற்றை போல
நேற்றே
நான் உணர்ந்தேன்
காமம் கூடிய ஓர் காதலை
அந்த இரவுக் காற்றில்...  609

நீ
இன்று சரியில்லை-என்றே
என்னை
சரி படுத்துகிறாய்
உன் இதழால்....       610

No comments:

Post a Comment