கற்றவை காதல்
என்று ஆன பின்பு
பெற்றவை அனைத்தும்
பெருந்துயரமானாலும்
அதை கரைப்பவை
அனைத்தும்
உன் அன்பு
முத்தங்கள் தானே
இந்த காலத்தில்.... 1841
இனிமை வறுமை
இரண்டும் இருந்தும்
இணையா வார்த்தைகளாய்
போகிறது
இந்த கவிதை... 1842
பெருமை பொங்க
எழுதிய கவிதையெல்லாம்
காதலின் வறுமையை
தீர்க்கும்
வருந்தங்களோடு
வாடி
கரையோரம் நின்ற போதும்... 1843
நதி ஓடும்
கண்களில்
விதியின் தடம் தெரியும்
விடை தெரியா
வாழ்க்கையின் கையில்
நம் வாழ்க்கை
தவழும் போது. . 1844
நீ சொல்லிய துயரம்
அல்ல இது!
சொல்லாத காதலின்
துயரம்! 1845
மழலையின்
பூமணச் சிரிப்பில்
சிறப்பும் உண்டு
என் பூவே!
நீயும் சிரிக்க வேண்டும்
மழலையின்
மொழியைக் கொண்டு.... 1846
செய்கை செய்யும்
சேட்டையை உணர்ந்து
சேமித்து வைத்த
அன்பை
அள்ளிக் கொடுத்து விடு
எனக்கும் சேர்த்து... 1847
என் பொறுமைக்கும்
ஒரு பெருமை உண்டு
மொத்தமாய்
அது
உன்னிடம் இருந்து
கிடைக்கும் போது ..... 1848
உள்ளம் நினைத்தால்
உயர்ந்தோர்
நாம் தான்
மற்றவை எல்லாம்
ஏன்
வீனாய் நினைத்து..... 1849
நம் துயரம்
அனைத்தையும்
கேட்டறிந்த இரவு
இன்னும்
துக்கப்பட்டு கொண்டு
இருக்கிறது
தான் ஒரு இரவு
என்பதை மறந்து
அதிகாலையிலும்.... 1850
No comments:
Post a Comment