காதல் பாட வேண்டிய
கண்களில்
கவிதை மட்டுமே
வாடிக் கொண்டு இருக்கிறது.. 1921
கனவை சுமந்த இரவோ
இன்னும் ஒரு படி
மேலே போய்
உன் இதழை சுமந்து
அழைகிறதே அன்பே! 1922
உன்னோடு
உண்டு கொள்ள
உணவாய் உருவாக்கி
வைக்கிறேன்
ஒவ்வொரு கவிதையையும்.. 1923
என்னிடமிருந்து
உன் இதழை காக்கும்
கைகளுக்கு
என் இதழே பரிசு... 1924
கோடுகள் இல்லா
ஒவியம் போலவும்
எழுத்துக்கள் இல்லா
கவிதை போலவும்
நீ இல்லாமல்
என் வாழ்க்கை இருக்கிறது... 1925
தொட்டுக் கொள்ள முடியாத
நிலவாய் நீ இருந்தும்
என்னை தொடந்து வந்து
ஒளிர்கிறாய் வாழ்க்கை
முழுவதும்... 1926
எல்லை இல்லா
எல்லா கவிதைகளும்
காற்றில் பறக்கட்டும்
என்னவளின் கண்களை நிரப்பட்டும்
புதுக்கனவுகளை உருவாக்கட்டும்.... 1927
வண்ண மயிலாக
ஆடி வரும் கவிதை எல்லாம்
உன்னையே
தேடி வரும்
உன் இதழையே
நாடி வரும்.... 1928
தோகையாக கனவை
விரித்து ஆடும்
வண்ண மயிலோ நீ!! 1929
கனவை சுமந்து
காற்றில் பறக்கும்
பட்டம் காதல்
காற்றாக வாழ்க்கை
நம் திசை மாற்றும் போதும்.. 1930
No comments:
Post a Comment