கேலி செய்யும்
கேள்விகளுக்கு எல்லாம்
என் மெளனத்தின்
பதில்கள்
ஏனோ கேட்கவில்லை!! 1971
என் எதிரே
நீ நிற்கும் போது
எதிர்படும் கேள்வி
எங்கே?
என் முத்தம் என.... 1972
மனச் சிதைவு
என்று ஒன்று வந்துவிட்டது
"மண"ச்சிதைவால்.... 1973
சிதறும் கனவுகளில்
மனச்சிதைவு கொண்ட
கண்களை கொண்டு
உறங்கிக் கொண்டு
காலம் கழிக்கிறேன்... 1974
பார்வைகள்
ஒரு புறம் பார்க்க
கண்களின் வழியே
பார்வை இழந்து
மனதின் வழியே
உன்னையே
தேடிப் பார்க்கிறேன்... 1975
நிஜங்களை கண்டு
காதலின் நிழல்கள்
பயந்து கொண்டு இருக்கிறது
கனவில் கூட... 1976
இப்போது இருக்கும்
இளமை கூட
உன் முத்தத்தின்
பழமையை
தேடிக்கொண்டு ஒடுகிறதே! 1977
சோலை எல்லாம் பூத்திருக்க!
சேகவன் நானும் காத்திருக்க!
இரவின் சாலையெல்லாம்
வேர்த்திருக்க!
எதற்கு
இந்த சேலையடி என் கண்ணே!! 1978
செவி மலரும்
உன் கொழுசின் ஒலியால்
என் இதழ் மலரும்
உன் இதமான
விழியின் ஒளியால்.. 1979
உன் பெண்மை கண்டு
வெட்கம்
நான் அடைந்தேன்!
இரவை
உன்னோடு இணைத்து
நீ என்னை
அவ்விரவில் அணைத்து... 1980
No comments:
Post a Comment