December 31, 2014

அம்மு

அன்புள்ள அம்முவிற்கு,
என்னை விட என் எழுத்துகளை அதிகம் ரசித்தவளும்,வாசித்தவளும் நீயாக மட்டுமே இருக்க முடியும். இருள் சூழ்ந்த வானத்தில் எவ்வாறு நிலா அழகாக தெரிகிறதோ அவ்வாறே உன்னைப் பற்றியும் உன் காதலை பற்றியும் எழுதும்போது என் எழுத்துகளும் அழகாக தெரிகிறது.

ஏனோ என்னுள் தனிமை வாட்டும் போது என்னை மீறி என்னால் எழுதப்படும் வார்த்தைகள் உன்னை ஒரு சில நேரம் வாட்டும் என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும் அதையும் நீ வாசித்து விட்டு சிறு புன்னகையிலே உன் கருத்துகள் மொத்ததையும் உதிர்த்து விடுவது தான் என் எழுத்தின் பலம்.

இந்த வருடம் முடியும் தருணம் இது. என்னால் முடிந்த வரை நம் காதலை பற்றி எழுதி இருக்கிறேன். ஆனாலும் இது குறைவு என்று எனக்கும் தெரியும் என்னை மன்னித்து விடு.

உந்தன் காதலை நினைக்கும்போது என்னுள் சந்தோசம் ஒரு பெரும் கடலாக  இருக்கிறது, ஆனால் அவளோடு ஆன என் காதலை நினைக்கும் போது ஏனோ கண்ணீர் என் வாழ்க்கையை அடி கோடிட்டு காட்டுகிறது.

வாழ தகுதியற்று நிற்கும் தருணத்தில் என் மீதான உன் காதல் தான் என்னை வாழச் சொல்கிறது.


நான் எழுதும் கவிதை 
முத்தங்களாக நீ
சொன்ன வார்த்தைகள்,
என் கவிதையின் 
வார்த்தைகள் முத்தங்களிடையே 
நீ செய்யும் சின்ன சின்ன
குறும்புகள்,
என் வார்த்தையின் அர்த்தங்கள்
பகலை இரவாக மாற்றும் 
ஓர் அற்புத போர்வை,
போர்வைக்குள் கவிதையாக 
உன் முத்தங்கள்...


-SunMuga-
31-12-2014

December 29, 2014

Phoenix

கண்ணாடி கடைகளை  
பார்த்த படி நடந்தாலும் 
என்னுள் உன் காதலே 
கடக்கிறது ஒவ்வொரு 
அடியிலும்...
******

கார்கள் ஓய்வு எடுக்க 
தனி அறைகள் இருக்கிறது
அன்பே! நம் காதல்
ஓயாமல் வேலை செய்ய ஒரு
அறையும் இல்லை என்பதே 
என் வருத்தம்...
******

கலைநயம் மிகுந்த பொருட்கள் 
ஏராளம் வண்ண வண்ண 
மின் விளக்குகளுடன்,
அன்பே! நான் ரசித்தது 
என்னவோ உன் கண்களை 
மட்டும் தான்...
******

படிகளை கூட பார்க்காமல் 
தடுமாறுவதை போல
என் கை விரல் தீண்டி
என் கண்களை பார்க்கிறாய்,
ஏறும்போதும் இறங்கும்போதும் escalator-ல்
******

அவ்வப்போது திரையில் 
குவியும் இருளுக்காகவே 
நானும் நீயும் போய் இருக்கலாம் 
பிசாசு படத்திற்கு..
******
நகைக் கடையில்
தேடிய நகை இல்லை என்று 
கோபமாய் நீ வெளியே 
வந்த பிறகு தான் நீ
சொன்னாய் - மகனுக்கு
"குஞ்சுமனி"தேடுவதாய்...
******

சொட்டு சொட்டாக மழை நீர்
சொட்டிய கண்ணாடியை 
பார்த்த போது புன்னகை 
பூத்தது உன் முகத்தில் 
எனக்கு மட்டும் தானே தெரியும்
அது உன் வேர்வையை 
ஞாபக படுத்துவதாய்..
******

நீண்ட நேரம் உன்
இதழ்களை சுவைப்பது 
போல தான்
பெரிய சைஸ் கப்-பில் 
உன்னோடு 
காபி பருகுவதும்..

இது ஒரு கனவு

இருள் சூழ்ந்த அறையுல்
கற்சிலையின் கைகளாக 
பாம்புகளின் வால்கள்..

******
பெரும் மழையாக,
பெரும் ஆறாக,
பெரும் கடலாக,
பெரும் அருவியாக,
அனைத்து கனவிலும் 
நீர் சுரக்கிறது...

******
திருவிழா இரவு
ஆட்களுக்கு தெரியாமல் 
என் பார்வையை 
தொடர்ந்தவளின் உருவம்
அறியவில்லை,
புற்றின் வெளியே
தன் தலையை நீட்டி
தன் வாய்களை திறந்து 
தன் பசியை போக்கி கொள்கிறது 
என்னோடு இருந்தவள்
ஊற்றிய பாலின் வழியே...
******

நீண்ட நிலப்பரப்பு 
நீண்ட ஓர் அலக்கலிப்பு 
நானும் என் அக்காவும் 
அலைகிறோம் யாரும் 
துரத்தாத போதும்...
******

சொந்த ஊரின் கோவில் அது
திருவிழா இரவு,
தெருக்கள் தோறும் 
மின்னி மின்னும் மின்சார 
விளக்குகள்,
யாருமற்ற சாலையை அடையும்போது 
அழுத்தமாக,
மிக சத்தமாக அழும்
பெண்ணின் குரல்,
ஒரு பெண் அல்ல
ஓராயிரம் பெண்ணின் 
குரல்கள்..
******

நிஜத்தில் கூட
என் அப்பாவின் கைகளை 
பற்றிக் கொண்டு நடப்பதில்லை,
முதல் முறை நடந்தேன்
மிக நீளமான பள்ளி சுவரை 
பார்த்த படி
யாரோ ஒருவரைப் பற்றி 
இருவரும்
பேசிக்கொண்டு நேற்றிரவு..
******

குடிசை வீடு 
விளக்கும் இல்லை,
அத்தைக்கு அறிவுறை 
கூறுகிறாள் அம்மா...
******

தென்னம் தோப்பு கிணற்றில்
தலை இல்லாத பெண் 
எப்படி உள்ளே வந்தது 
என்று தெரியாத படி
ஆம்புலன்ஸ்,
அலறிய படி ஓடி வந்த
விதவை கிளவியின் 
கால்களை தடுக்கிறது 
வயல் வரப்புகள்,
அவள் கையை பற்றி 
அவளை தூக்கும் போது 
நான் பார்த்தேன்
அவள் கைகள் முழுதும் 
ரத்தம்...
******

வறண்ட நிலத்தில் 
திடீரென 
வானத்தில் இருந்து மட்டும் 
அல்ல இன்னும் எத்தனையோ 
வழிகளில் வழிகிறது 
தண்ணீர்,
கண்ணாடி அறையில் 
பைத்தியமாய் அலையும் 
வேசிப் பெண் குடுவையை 
எடுத்து தானே தன் வயிறை 
கிழித்துக் கொள்கிறாள்,
வெளியே நான் நிற்கும் 
இடத்தை தவிர அனைத்து
இடமும் தண்ணீரால் 
நிரம்பி இருக்கிறது,
பெண்களை பிடிக்காத கயவன் 
போல ஒருவன் தண்ணீரில் 
ஓடும் படகில் ஒரு
பெண்ணின் பிறப்புறுப்பில் 
தன் கையை விட்டு 
கொன்று வீசுகிறான்,
எங்கோ இழுத்து செல்லும்
படகு காட்டின் செடி கொடிகள் 
மீது சீறி பாய்ந்து மலையில் 
படியில் இறங்கும் போது தான்
நான் பார்த்தேன் கோவிந்தன் 
சாமியின் உருவமாக நாங்கள் 
என்னும் விளக்கு தூணை..
******

இருள் சூழ்ந்த குகை,
பாறையின் மீது வடியும் 
தண்ணீர்,
தண்ணீரின் மீது மிதக்கும் 
பாம்புகள்,
அரை நிர்வாணமாய்
பாறையின் மீது அமர்ந்து 
இருக்கும் என் அண்ணன்..
******

December 23, 2014

புத்தாண்டு

இந்த ஆண்டின்
இறுதி கடமை உன்னிடம்
மன்னிப்பு கேட்பது...

அடுத்த ஆண்டின்
முதல் கடமை உன்னிடம்
மன்னிப்பு கேட்பது...

உனக்கும் எனக்குமான
வாழ்க்கையில் எனக்கு
மிஞ்சி இருக்கும்
ஒர் கடமை உன்னிடம்
மன்னிப்பு கேட்பது...

மானமற்ற என் வாழ்க்கையில்
இன்னும் என் உயிர் இருக்கிறது உன்னிடம் மன்னிப்பு கேட்க...

உயிரே! என்று உன்னை
அழைத்தற்காக மன்னிப்பு கேட்கிறேன்..

என் உலகம்! நீ என்று
நினைத்தற்காக மன்னிப்பு
கேட்கிறேன்..

உன்னுடனான என் கனவிற்கு
மன்னிப்பு கேட்கிறேன்..

கனவிலும் உனக்காக
நான் வடித்த கண்ணீருக்காக
மன்னிப்பு கேட்கிறேன்..

நிலவாக உன்னை நினைத்து
அதில் இரவாக என்னை
இணைத்து நான் வடித்த
கவிதைக்காக மன்னிப்பு
கேட்கிறேன்..

கவிதையில் வாழும்
என் காதலுக்காக நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்..

காதலுள் வாழும்
என் பிரியத்திற்காக நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்..

பிரியத்தில் வாழும்
என் சுகத்திற்காக நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்..

சுகமாக நான் நினைக்கும்
என் மரணத்தின் முன்
உன்னிடம்
நான் கேட்க நினைக்கிறேன்
ஓர் அர்த்தமற்ற மன்னிப்பு..

-SunMuga-
24-12-2014 00.08 AM

December 16, 2014

இரவு பேய்

இருள் சூழும் போது
நீ வந்து விடுகிறாய்,
நீ வந்தால் தான்
எனக்கு எப்போதும்
இரவு வருகிறது..
இருட்டில் உன்னில்
முதல் எது முடிவு எது
என்று என்னால் யூகிக்க முடியவில்லை..
தூக்கம் இல்லாமல்
முழித்து இருக்கும் எனக்கு
எப்போதும் துக்கதோடு
வரும் நீ தான் ஆறுதல்..
துக்கம் நிறைந்த உன்
கண்களை இரவாக
நானும் பார்க்கிறேன்,
நான் பார்க்கும் இடமெல்லாம்
உன் துக்கமாகவே தெரிவது
தான் எனக்கு துயரம்..
நான் உன்னோடு பேசினால்
அது பகல்,
நீ என்னோடு பேசினால்
அது இரவு,
என்று நானே
பிரித்துக் கொண்டேன்..
இரவை உடையாக உடுத்தி
வரும் உன்னை
ஒரு முறை கூட உரசி
பார்த்தது இல்லை - ஏன்?
கண்களை திறந்து பார்த்தால்
இவ்வுலகம் ஓர் இருட்டு,
கண்களை மூடி பார்த்தால்
இருட்டுனுல் நீ ஓர் உலகம்..
நிலவை பார்த்து நீ சிரித்தாய்!
ஏன் என்று நான் கேட்டேன்
இதோ உன் விளக்கம்;
இருள் படர்ந்த என் உலகில்
எட்டி பார்த்தது அந்த நிலா;
ஆனால் நீயோ!
இருள் படர்ந்த என் இரவில்
எட்டி குதித்த ஓர் நிலா...
இரவே உன் துக்கத்தில்
பிறந்த ஒரு துளி தான்
இந்த கடல் என்றாலும்
அவை உன்னைப்போல இல்லை,
தன் துக்கங்களை
அடக்க முடியாமல் அலையாய்
அலைந்து கொண்டு இருக்கிறது,
அதன் சலசலப்பு இன்னும்
எழும்பிக் கொண்டே இருக்கிறது..
-SunMuga-
19-12-2014 12.00 AM

December 15, 2014

தம்பியின் காதல்

ஒரு நிமிடம் தாயாக மாறி,
தடுமாறி யாருக்கு
யார் அறிவுறை கூறுவது?
என்று யோசித்து -
நடப்பவை நடக்கும் என்ற
முதிர்ச்சியோடு முதல்
முதலில் தம்பியின் கண்களை
பார்க்க தவிர்த்தேன்..
அனைத்தும் அடங்கிய இரவு
சட்டென்று பெரியவன் ஆன
உணர்வு எழுந்ததும்-
எழுந்தும் எழ மறுக்கும்
கண்ணீர் - காரணம்
தம்பியின் காதல்..
காதல் ஊற்று நீர்,
கொப்பளிப்பதோ உணர்ச்சிகள்,
உணர்ச்சிகள் பெருக பெருக
ஊற்று நீரும் பெருகுவதை
போல, வாழ்வும், வாழ்வதற்கான வளமும் பெருக நித்தம்
உழைக்க வேண்டும்..
உழைப்பு உன்னிடம் அதிகம்
இருக்கிறது..
என்னுள் இருக்கும்
காதலை பற்றி எனக்கே
தெரியாத போது உனக்கு
காதலை பற்றி கூற எனக்கு
எந்தவொரு அடிப்படை
தகுதியும் இல்லை என்றே
நினைத்தேன் அவ்விரவில்..
ஆதி முதல் அனைத்தையும்
அம்மாவிடம் நீ சொல்லி
விட்ட பிறகு தான் பெரு மூச்சு
நான் விட்டேன்..
-SunMuga-
15-12-2014 01.30 AM

December 14, 2014

தாய்

ஆணோ! பெண்ணோ!!
தன் மார்பில் அனைத்துக்
கொள்ளும் தாய்க்கு தான்
தெரியும் குழந்தையின் பசி
எப்போது அடங்கும் என..
உறவை நினைத்து
உண்ண மறந்த தாயும்
அழுகிறாள் - சப்பி சப்பி
ஏமாற்றம் அடையும்
குழந்தையை நினைத்து..
யாருமே பிடிக்கவில்லை என்று
யாருமற்ற வாசல் படியின்
சுவரை பிடித்து அழுகிறது
என் வீட்டு குழந்தை...
-SunMuga-
14-12-2014 22.15 PM

December 13, 2014

முதல் பரிசு

என் சிரிப்பினில் பிறக்கிறது 
உன் காதலும், காமமும்.

--------------------------------------------------------------------
காமம் கீச்சப்பட்ட இரவின் பின்
அதிகாலை பிறக்கிறது
சிறு குழந்தையாக.
--------------------------------------------------------------------

கோடிட்ட இடங்களை 
நிரப்புவது போல தான்
உன் கண்கள் காட்டிய 
இடங்களை நிரப்புகிறேன் 
என் இதழால்...
--------------------------------------------------------------------

உன் இமை அசைத்தால் 
உன் இதழுக்கு தான்
முதல் பரிசு...
--------------------------------------------------------------------

பக்கத்து அறை மெதுவாக 
திறந்தாலும் மிக
நுணுக்கமாக கேட்கிறது 
கடன் வாங்கிய பிறகு..
--------------------------------------------------------------------

பாய்ந்து வந்த பாம்பு
கண்ணுக்குள் கொத்திய 
பிறகு கலைந்தது அந்த கனவு.
--------------------------------------------------------------------

குடிசையும் வானமாகியது 
குண்டு பல்பில் 
நட்சத்திரம் மிளிரும் போது..
--------------------------------------------------------------------

-SunMuga-
14-12-2014 22.00 PM

December 11, 2014

ஊதிய உயர்வு

இப்போதும் எங்கள் மீது திணிக்கப் பட்டு இருக்கும் அந்த வேலையில் தான் நாங்கள் மூழ்கி கிடந்தோம். திடீரென உங்கள் சிரித்த முக அழைப்பு எங்களுக்கு மிக சலிப்பூட்யது தான், இருந்தாலும்கூட நாங்கள் மிகுந்த மன  யோசனையோடு தான் உங்கள் அறையை மிக நிதானத்துடன் மெதுவாக அடைந்தோம். எங்களை அறையின் உள்ளே வரவேற்று சென்ற வருடம் பதிவு செய்யப்பட்ட அதே ரெக்கார்டர் வாய்ஸை( சென்ற வருடத்தை காட்டிலும் இந்த வருடம் நமது நிர்வாகத்தின் நிதி நிலமை சற்று மிக மோசமான நிலையில் இருந்தாலும்கூட, உங்களின் மிக திறமையான உழைப்பை மதிப்பில் கொண்டு, நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்ட ஊதிய உயர்வு உங்களுக்கு கொடுக்கப் படுகிறது) கசிய தொடங்கியது எந்தவொரு விதத்திலும் எங்கள் மனதை பாதிக்கவில்லை.

ஏனென்றால்;

"அண்ணே!அன்புக்கு அன்னை தெரசா;
ஆஹா!!
அறிவுக்கு அப்துல் கலாம்
ஓஹோ!!
அடக்கத்துல நெல்சன் மண்டேலா!!
அடடாடா!!
நம்ம போஸ் பாண்டி அண்ணன் கொடுத்த ஐந்நூற!
ஆமா!!
அஞ்சு லட்சமா! நினச்சுகின்னு!!
ஆமா!
நம்ம அல்லி நகரத்து அடியை தான் கொஞ்சம் காட்டுவமா?

நாங்கலாம் இந்த குருப்போட பரம்பரை உறுப்பினர் என்ற வகையில் தான்.

ஆனாலும் ஒரே ஒரு கேள்வி தான் ஆழ் மனதுக்குள் எழுகிறது. அது என்னவென்றால் நிர்வாகத்தின் நிதி நிலமை என்பது எல்லாருக்கும் சமம் தானே? அப்படி இருக்கும் போது ஒரு பிரிவினருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாகவும், இன்னோரு  பிரிவினருக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். குறைத்து கொடுத்தவரிடம் நிதி நிலமையை பற்றி கூவி கூவி பேசும் முன் அதை பற்றி சற்றும் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
வேலை செய்வதற்கு ஆட்கள் இருக்கும் பட்சத்தில் புதிய வேலைகள் பிறக்கும் என்ற ஜே பி சாணக்கியாவின் வரிகளுக்கு சற்றும் குறையாத பட்சத்தில் வேலைகளை மட்டும் அள்ளி அள்ளி எங்களை போன்ற மனிதர்களுக்கு கொடுத்து விட்டு ஊதிய உயர்வு என்ற இலையுதிர் காலத்தில் மட்டும் நிர்வாகத்தின் நிதி நிலமை மோசம் என்று எங்கள் அடி வயிற்றில் அல்ல அதற்கும் கீழே மிதிப்பது எந்த விதத்தில் தான் நியாயம்.
-SunMuga-
11-12-2014 23.17 PM

December 10, 2014

அலுவலகம்

ஆதி முதலே எனக்கும் என் மீது திணிக்கப்பட்டு இருக்கும் இவ்வேலைக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றே தோன்றுகிறது. யாருக்கு புரியும் நல்ல கவிதையை படிக்க ஏங்கும் என் கண்களின் வலியும், நல்ல கவிதையை எழுத துடிக்கும் என் கை விரலின் வலியும். என்னை சுற்றும் உலகத்தை நான் நிதானமாக தான் கவனிக்கிறேன் என்று எனக்கே தெரிகிறது. உறக்கமற்ற இரவில் உடையும் காதல் எனக்கு பல நேரங்களில் என்னைப் பற்றி பல விதமான  அறிக்கைகள் தெரிவிக்க தான் செய்கிறது. என்ன செய்வது என்று யோசிப்பது தான் மிகத் துயரமாக இருக்கிறது.
அப்போதும் சம்பளத்திற்காக தான் வேலை செய்தேன். இப்போதும் சம்பளத்திற்காக தான் வேலை செய்கிறேன். இதற்கு மத்தியில் குறைவான சம்பளம் பெறும் உன்னை நான் எப்படி காதலிக்க முடியும் என்று என்னை ஒதுக்கியவளையும் நினைக்கத் தான் செய்கிறேன்.
அவள் என்னை ஒதுக்கியதில் எந்தவொரு தவறும் இல்லை. இது என்னைப் பற்றி நான் எழுதிய வரி;
நித்தம் நிதானமுற்றே
அலைகிறேன் நிறையாத
வயிற்றை சுமந்துகொண்டு..
எழுதி இருப்பது என்னவோ ஒரு வரி தான். ஆனால் அதில் பிரதிபலிப்பது என் இயல்பான வாழ்க்கை. இந்த வாழ்க்கை ஒரு வேலை அவளுக்கு புரிந்து இருக்கலாம் அதனால் என்னவோ சேரும் முன்னே பிரிந்து விட்டாள்.
என் வாழ்க்கையின் விதியை எதிர் நோக்கி வீதி எங்கும் அலைகிறேன் விடுமுறை நாட்களில் கூட, வாழ்வதற்கு நான் ஆற்றும் கடமைகளை மறந்து.
-SunMuga-
10-12-2014 03.48

December 8, 2014

காரணம்

என்னைப் பார்த்து
சிலர் சிரிப்பதற்க்கும்
நான் அழுவதற்க்கும்
நானே காரணம்
சில பல நேரங்களில்...

என்ன காரணம்?

காரணமே இதுவரை நீ கூறவில்லை என்றாலும், உந்தன் செய்கைகள் அனைத்தும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

முதலிரவு

ஆணுக்கும் பெண்ணுக்கும்
எப்பொழுதும் நடப்பது தான்
அப்பொழுதும் நடக்கிறது,
விரிகின்ற காமத்தில்
சுருங்கும் உடையைப் போல,
என் மனம் தான்
இங்கு நொருங்குகிறது,
இனி என் குறி எழுவதற்கு
சாத்தியங்கள் அற்று
போய்விட்டது அவளோடு- ஆன
வேறொருவனின் சிந்தனையில்..

31-08-2014

கிட்டத்தட்ட என் மனதின் ஒரு மாத போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது இன்று. ஏன் இப்படி ஒரு தவிப்பு என் மனதிற்கு என்று எனக்கே தெரியவில்லை. காதலியை காதலன் கான காத்திருக்கும் தருணம் எப்படி பட்டது என்று எனக்கும் தெரியும். ஆனால் எப்படி பார்க்காமல் இருப்பது என்பது தான் இன்றைய தவிப்பு. உண்மையை சொல்லபோனல் ஏதோ ஒரு விரக்தி வாழ்க்கையின் மீது. வாழ கூட தகுதி இல்லை என்ற ஒரு சிந்தனை அவ்வளவு தான்.

December 7, 2014

நான் பார்த்த வரையில்

கை குழந்தையின்
கண்கள் கடலை
பார்த்து ரசிக்கிறது,
பள்ளிக் குழந்தை பவ்வியமாய்
நடனம் ஆடுகிறது,
கல்லூரி பெண்ணின் கண்கள்  தன் காதலன் கண்ணோடு
கதை பேசுகிறது,
கல்யாணம் ஆனவள்
கண்கள் ஏனோ கண்ணீரோடு
கரையை பார்க்கிறது,
இவை யாவும் மத்தியில்
இவ்வுலகத்தை ஒதுக்கியவளின்
கண்கள் தன்னோடு
ஒதுங்கிக் கொள்ள
யாரோ ஒருவனை தேடிக் கொண்டு இருக்கிறது
-SunMuga-
07-12-2014 17.07 PM

வெட்கம்

உன்னைப் பார்த்து
வெட்கப்பட்டு முகம் மூடி
பழகியவள், முதல் முறை
ஆசைப்படுகிறேன் எருவில்
முகம் மூட வேண்டுமென,
நீ இல்லாத இவ்விரவில்..
-SunMuga-
07-12-2014 00.19 AM

உடை

உடுத்தும் உடையைப் போல
வாங்கும் வருமானம் தான்
ஒருவனுக்கு மானம் என்றால்
நான் நித்தம்
அம்மனமாக தான் இருக்கிறேன்
கூச்சங்களை கடந்து...
-SunMuga -

December 6, 2014

கடிதம்

உன் கடிதத்தில்
வாழ்கிறேன் கண்மணியே!
கவிதையின் வடிவமாய்!
உன் கரம் தொட்டு
பார்க்கிறேன் கண்மணியே!
வார்த்தையின் வடிவமாய்!
அர்த்த ராத்திரியில்
உன்னையே அனைத்துக்
கொள்ள பார்க்கிறேன் கண்மணியே!
கடிதத்தின் அர்த்தமாய்!!
கடிதத்தின் முடிவுரையில்
உன் முத்ததையை
நான் எதிர் பார்க்கிறேன்!!
என் கண்மணியே!
-SunMuga-
07-12-2014 00.25 AM

நீயும் வருவாய்

நீயும் வருவாய்;
மெல்ல முத்தமும் தருவாய்;
சொல்லெடுத்து தருவாய்;
மெல்ல மெல்ல மேனியில் பொழிவாய்;
மோதி நின்ற கண்கள்;
பாதி பார்த்த கைகள் என;
பக்குவமாய் உன் இதழ் பேச
அந்த இரவிலும்
பத பதக்கும் என் இதயம்;
-SunMuga-
06-12-2014 22.04 PM

புத்தகம்

புத்தகம் நான் படித்தாலும்
புத்தியிலே உன் முகம்;
புரட்டிய பக்கம் எல்லாம்
புன்னகையே உன் முகம்;
எடுத்து வைக்க மனமில்லை;
புத்தகமான உன் இதழை
படித்து படித்து ஏனோ
சிவந்தது இதழோடு
என் கண்களும்;
காகிதத்தில் கவிதை படித்தேன்
கவிதையின் விரலை
கை கோர்த்துக் கொண்டு;
கண் இமைக்கும் நேரத்தில்
நான் படித்தது எத்தனையோ
பக்கங்கள்;
-SunMuga-
06-12-2014 21.46 PM

நினைத்து இருந்தேன்

சகலமும் நீ என்று
நினைத்து இருந்தேன்;
சமாதியின் சருகாக
தனித்து இருந்தேன்;
நல்ல படம் பார்க்கும் போது
உன் முகத்தை
பார்த்து இருந்தேன்;
நல்ல இசையை
கேட்கும் போது உன் குரலை
இணைத்து இருந்தேன்;
நல்ல கவிதைகள் வாசிக்கும்
போது உன் இதழை
ரசித்து கிடந்தேன்...
அன்பே! சகலமும் நீ எனக்கு
என்று? தான் நான் உனக்கு;
-SunMuga-
06-12-2014 21.30 PM

December 5, 2014

உன் முத்தம்

அனைத்தும் முடிந்தது
இன்னும் இருக்கிறது
காதலின் விருட்சமாய்
உன் நெற்றி முத்தம்...

December 2, 2014

நிசப்தமான இரவு

நிசப்தமான இரவில்
நிதானமாக வடிகிறது
என் கண்ணீர்!
உயிரே!
உன்னை நினைத்து
நான் கரையும் இந்த
இரவும் விடிந்து
விட்டது காலையில்;
இப்பொழுதும்
நிதானமாகவே வடிகிறது
என் கண்ணில் கண்ணீர்...

The Lines Are My Own Life

I Set A Lines For You,
I Know,
You Know The Meaning Of The Lines,
Again I Know,
You Don't Feel The Meaning Of The Lines,
Because,
The Lines Are My Own Life

-SunMuga-
30-11-2014 22.58PM

November 22, 2014

முகா

மூச்சு முட்டும் போது கூட
நீ உச்சரித்த வார்த்தை
முகா!!!!
முகா!
என்று என்னை முதல் முதலில்
அழைத்தது நீயாக மட்டுமே
இருக்க முடியும் இந்த
உலகத்தில்..
முகா!
உன் முகம் பார்த்த நொடிகள்
ஏனோ நான் மடிய நினைத்த
நொடிக்கு முன் கூட கடந்து
வந்தது!!

November 16, 2014

கவிதை

உன் மீதான என் காதலுக்கு என்னில் எப்போதும் ஆதாரமாக இருப்பது என் கண்ணில் ஒரு துளி கண்ணீர் மட்டும் தான். பெண்ணே! உன்னைப் பற்றி நான் எழுதிய கவிதை உனக்கே பிடித்தும் பிடிக்கவில்லை என்றால், நான் யாரிடம் காட்டிக் கொள்ள முடியும், இது நான் எழுதிய கவிதை என்று. அதனாலேயே பல கவிதைகளை என் மனதின் அடி ஆழத்தில் புதைத்து விடுகிறேன் பல நேரங்களில்..
உன்னைப் புரிந்து தான் பிரிந்து வாழ்கிறேன். உன்னை பிரிந்து நான் வாழவில்லை. எதோ ஒரு இரவில் உன் பிரிவை நினைத்து மூச்சு முட்டும் போது மட்டும் உன் முதல் முத்தத்தின் மூச்சுக் காற்றின் வெப்பம் தேவைப்படுகிறது..
இப்போது பெரும் பாரமாக நீளும் இந்த இரவுகள், மிக நீண்ட வரமாக மாற வேண்டும் உன்னோடு நான் கழிக்கும் போது. உன் கண்ணோடு மட்டுமே பேசிப் பழகிய என் கண்கள் இன்று ஏனோ கலங்குகிறது. கல்யாணத்திற்கு பிறகான இரவாகவே என் கனவுகள் விரிகிறது. விரிந்த கனவில் நான் ஏனோ உன் காதலின்  தடம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

November 10, 2014

கண்ணீர் கவிதைகள்

என்னுள் " நீ" இருந்தும்
கண்ணில் "கண்ணீர்"!!
இதயம் துடிக்கிறது - உன்
நினைவில்,
கண்ணீர் கசிகிறது - உன்
பிரிவில்..
" காதல்" என்ற என் கேள்விக்கு
"காலம்" தந்த பதில்
"கண்ணீர்"!!
மண்ணில் விழாமல்
வீதி எங்கும் என்
கண்ணீர் மழை!!
கண்ணீர் விடவும் மனமில்லை
கண்ணில் " நீ" என்பதால்,
விடாமலும் இருக்க
முடியவில்லை மனதில்
"நீ" என்பதால்!!
-SunMuga-
  2011

கவிதை வரிகள்

மண்ணில் புதைவதற்கு முன்னால்
அவள் மனதில் புதைந்து விட்டேன்,
ஆஹா! கவிதை வரிகளாக!!
என்னுள் "நீ" என்பதால்,
கண்ணில் "நீ",
கண்ணில் "நீ" என்பதால்,
நம்மில் " காதல்"..
"காதல்" என்றால் என்ன?
கண் - பார்க்கும் போது
              பேசிக்கொள்வது
கண் - காணாத போது
              கண்ணீர் விடுவது..
என் காதலின் பிறப்பிடம்
அவள் " விழி" என்றால்,
அவளின் இருப்பிடம் என்
"இதயம்" தானே?
பிழையுள்ள என் கவிதையை
காதலிக்கிறாள்,
என்னையோ வெறுக்கிறாள்!
வரிகள் ஒவ்வொன்றும்
உன்னை தழுவியது,
அது உன்னை தழுவியதாலோ!
என் கவிதை வரிகளோடு
பின் தொடரும் உன்
விழி எப்போது என்னை
பின் தொடரும் என் உயிரே!!
பட்டம் நானாக,
கவிதை வரி என்ற
நூலாக நீயாக,
எங்கோ பறக்கிறதடி
என் மனம்....
-SunMuga-
  2011

November 9, 2014

திருமண வாழ்க்கை

காலைச் சூரியன் கண்
திறந்து பார்க்கிறான்;
சந்தோஷமாக பலர்
பாதங்கள் நடை போட
ஆரம்பிக்கிறது;
தலை குனிந்து வணக்கம்
சொல்லும் வாழை மரம்;
செவ்விதழ் ரோஜாவும்,
மனம் மயக்கும் சந்தனமும்,
அதற்கு அழகு சேர்க்கும்
குங்குமமும்,
சிறு துளி பன்னீர் மழை
தூவும் குவளையும்,
காதுக்கு இனிமை சேர்க்கும்
மத்தளமும் முழங்க;
அரங்கம் முழுதும் மூத்தோர்,
பெற்றோர், இளையோர்,
தோழர்கள், தோழிகள்
மற்றும் வாழ்த்த வயதில்லை
என்று தன் பெற்றோரை விட
அழகா! என்று மெய் மறந்து
தன் அம்மாவின் மடியில்
அமர்ந்திருந்த மழலைச்
செல்வமும்,
எங்கள் திருமணத்தின் போது..
அவளின் வளையல் ஒளி
ஒளிரும் ஒளியை மிஞ்சும்,
அவள் கொலுசின் ஒலி
மத்தள ஒலியை தோற்கடிக்கும்;
வண்ண மீன் போன்ற
தன் கண்களுக்கு
கரு மையினால்
வலை போட்டு;
கண்ணிலே ஜடை செய்து
ஒரு வித நமட்டுச் சிரிப்புடன்
மணமேடையில் என் அருகே
வந்து அமர்ந்தாள் என்னவள்;
வாழ்த்துக்கள் தூவ
கட்டினேன் மூன்று முடுச்சு;
அன்பில் என் அன்னையாக
என்றும் நீ இருக்க வேண்டும்
என்று முதல் முடுச்சு;
பாசத்தில் உன் தந்தையாக
என்றும் நான் இருப்பேன்
என்று இரண்டாவது முடுச்சு;
உன் குழந்தையாக என்றும்
உன் மடியில் தவழ வேண்டும்
என்று மூன்றாவது முடுச்சு;
மலிந்த ஒளியில் புரட்டி
படித்தேன் - என் கவிதையை
ஆஹா! என்ன அழகு,
படித்ததும், படிக்காததும்;
என் கவிதையில்
மச்சம் என்னும் கரும் புள்ளியோ,
மேற்குறியீடாக தோன்றுகிறது,
மற்றொரு மேற்குறியீடு எங்கே
என்று தேடித் தேடி படிக்கிறேன்..
வார்த்தை வரிகளை விட
என் கை ரேகையே அதிகம்
தென்படுகிறது- என் கவிதையில்
நான் கொஞ்சம் தொட்டுப்
படித்ததால் என்னவோ!!
காற்புள்ளிக்கோ வெகுமதி
என் கவிதையில்,
கிடையாத ஒன்றை கிடைக்கும்
என்ற அரை மனதில்
தேடிப் பார்க்கிறேன்
முற்றும் முற்றுப் பெறாத
முற்றுப் புள்ளியை;
என் கவிதையின் ஒரு
கேள்வி; நமக்கு ஓர்
உயிர் உருவானால்
என்னை எப்படி
கவனிப்பாய் என்று?
என் குழந்தைக்கும்
குழந்தையாம்!!
உன் விளையாட்டு
பொருளாகவே மாறி விட
ஆசையடி;
மயங்கும் மாலைப் பொழுதில்
குழந்தை போல,
உன் விரல் பிடித்து
நடப்பேன் என்றேன்;
மறுகனம் அவளோ கால்
வலித்தால் என்றால்?
என் கண்ணீரை காய்ச்சி
ஒத்தனம் கொடுப்பேன்
என்றேன்;
அவளும் சொல்கிறாள்
I Lv U என்று கண்ணீரோடு ;
நீ குனிந்து உன்
உடை மாற்ற விட மாட்டேன்;
உன் உடையையும் நானே
துவைப்பேன்;
சமைப்பது உன் விரலாக
இருந்தாலும், ஒரு சில
வேலைகளை சமாளிப்பது
என் விரலாக இருக்கும்..
வீட்டை நீ துடைத்தாலும்
என் மனம் விட்டுக் கொடுக்காது;
நீ தூங்கும் போது
நீ திரும்பிய பக்கமெல்லாம்
நான் இருப்பேன் உன் கை
என் மேல் படவே;
நம் இரு உயிரும்
கண்ணீர் விடுகிறது நம்
உயிரின் பாதம் கழுவுவதற்காக..
உன் விழி போல்
அவன் விழி,
விழியின் கருவிழி போல் மேனி,
பிறந்தான் நம் மகன்...
வலியில் நீ துடித்தாலும்
நம் மகனின் விழியை
பார்த்து சிரிக்கிறாயே
என் உயிரே!
என் விரலில் முத்தமிட்டபடி;
-SunMuga-

November 6, 2014

பிறை நிலா

நிலவே!
உன் முகம் பார்த்தே
பல இரவை கடந்து விட்டேன்
இப்போது காத்திருக்கிறேன்
நான் இறப்பதற்கு!!!
பகல் பொழுதில் கூட
இந்த சூரியன் தேடும்
நிலவு நீ!!
நீ இல்லமால் ஒரு
நாளும் நான் ரசித்தது இல்லை
அந்த நிலவை!!
நிலவே!!
இரவில்
கரையில் அமரும்போதெல்லாம் உன் கரம் தேவைப்படுகிறது..
இரவில் பொங்கி எழும்
அலைகள் கடலின் உள்ளே
அடங்குவது போல
உன் மீதான ஆசைகளும்
என்னுள்ளே அடங்கிவிடுகிறது..
நிலவொளியில்
கடல் காற்றை விட
உன் மூச்சுக் காற்றே
என்னை முத்தமிட வைக்கிறது..
நிலவொளியில்
நீ அமர்ந்து ஆடிய
ஊஞ்சல் என்னவோ
இன்னும் ஆடிக் கொண்டே
இருக்கிறது என் கண்களில்..
உன் கன்னத்தோடு
என் கன்னம்
சேர்த்து ஒரு நாளவது
நான் கான வேண்டும்
அந்த நிலவை!!!
நீ இல்லாத போது
நிலவோடு பேசிக் கொள்கிறேன்,
நீ இருக்கும் போது
நிலவோடு பேசிக் கொள்வதாய் எண்ணிக் கொள்கிறேன்..
இருளில் தானே
நிலவு இருக்கும்,
நீ உன் உடைக்குள்
அடங்கி இருப்பதை போல..
கொளுத்தும் வெயிலை விட, கொட்டும் பனியின்
கொடுமை அதிகம்
நீ இல்லாத போது...
இரவில்!
நடுங்குவது போலவே
நடித்து கொள்கிறாய்
நான் உன்னை அனைத்துக்
கொள்ள...

October 30, 2014

இரவு

நம் பிரிவை நினைத்து
விரியும் இந்த இரவில்
நான் எப்படி கண்ணீர்
இல்லாமல் கடக்க முடியும்?
கனவே!! யாரும் அற்ற
என் அறையில்
இரவில் நான் உன்னோடு
உறங்க தான் நித்தம்
வணங்குகிறேன் அந்த
கடவுளையும் கண்ணீரோடு.,
ஏதோவொரு காரணம்
உன் பிரிவிற்கு,
இரவில் தான் புரிகிறது
அது நான் என்று.,
இரவுக்கு முன் பொழுதில் நீ
உச்சரித்த வார்த்தைகள் தான்
வளர்க்கிறது என் கனவுகளை
நித்தம் உன்னோடு.,
இரவில் எனக்காக நீ பாடும்
பாடல் தான் என்னை
பாடலாக வாழச் சொல்கிறது
உன் குரலில்....
என்னைவிட இரவின்
கொடுமையை நீ தான்
அதிகமாய் அனுபவித்து
இருப்பாய் என்று
எனக்கும் தெரியும்....
ஏனோ ஒரு சில
இரவில் உன்னை
இறுக்கமாக கட்டி அனைத்து
இறந்து விடவே தோன்றுகிறது..
அன்பே!!
உன் விழியின் பார்வையை
பார்த்தே இத்தனை இரவுகளை
கடந்து விட்டேன் என் விழியை
மூடிக் கொண்டு...
உறக்கம் வராத இரவுகளில்
வானின் நட்சத்திரங்களை
எண்ண தொடங்கிவிடுகிறேன்
உன் முத்தத்தை எண்ணுவதாய் நினைத்து....
உன் இதழ் குவித்து
காற்றின் வழியே
நீ கொடுத்த முத்ததின்
மூச்சுக் காற்றைத் தான்
பல வருடங்கள் தாண்டியும்
நான் சுவாசித்துக் கொண்டு
இருக்கிறேன்...
-SunMuga-
30-10-2014 23.00 PM

October 29, 2014

மாடிப்படி

மாடிப்படியில் ஒரு முறை
நீ கொடுத்த முத்தத்தால்
இப்போது ஒவ்வொரு
முறையும் ஏறிப் பார்க்கிறேன்;
உன்னையே எதிர் பார்க்கிறேன்;
மிக நீண்ட இரவில்
உன்னோடு தொலைபேசியில்
உரையாட அவ்வப்போது
உதவுவது உன்
பாதம் மிதித்த இந்த
மாடிப்படி தான் என் உயிரே!
நீ இல்லாத இரவில்
உறங்கச் செல்லும் முன்
ஒருமுறை முத்தமிட்டுத்
தான் செல்லுகிறேன்
உன் பாதம்
பட்ட அந்த மாடிப்படியில்...
நினைவே!! எப்போதெல்லாம்
உன்னை நினைக்கிறேனோ
அப்போதெல்லாம் நான்
வந்து அமர்வது நம்
வீட்டு மாடிப்படி தான்...
உறக்கம் வராத ஒரு சில
இரவில் அந்த மாடிப்படிகளிலே
உறங்கி விடுகிறேன்
உன் மடியாக அந்த
படிகளை நினைத்து
என் அன்பே!!
-SunMuga-
29-10-2014 21.45 PM

மூன்றாம் பிறை

அன்பே!
உன்னை கவனிக்க
தவறும் அந்த மூன்று
நாட்கள் எனக்கு
எப்போதும் பிடிப்பதில்லை,
ஆனால் எனக்காக
பிறந்தவன் நீ,
எப்படியடா நீ இப்படி
மாறினாய்;
என்னை முத்தமிடவே
சமையல்அறை பக்கம்
ஒதுங்கியவன் நீ,
இப்போதெல்லாம்
நீயே சமைத்து
எனக்கு ஊட்டி விடுகிறாய்
என் வலியின் வேதனை
நீ உள்வாங்கிக் கொண்டு..
என் மீதான உன்
அன்பை கொஞ்சம்
குறைத்துக் கொள்
என் அன்பே!
உன்னதமான உன் அன்பால்
இப்போதெல்லாம் நான்காம்
நாளும் நீடிக்கிறதடா
என் மடையா!!
-SunMuga-
29-10-2014 21.00 PM

October 28, 2014

கற்பம்

கள்வா!
இந்நாள் உன்னால்
நான் கற்பம் தரித்தேன்,
கண்ணால் சொல்ல
தவித்தேன்,
உன் பின்னால்
அனைத்து உன் முதுகில்
முத்தமிட்டு சொல்ல
துடித்தேன்,
உள்ளே துடிக்கும்
நம் உயிர்,
உள்ளுக்குள்ளான ஏதோவொரு
ஆனந்தம்,
ஆணோ, பெண்ணோ?
அய்யோ!!
நானும் இனி ஒரு தாய்!!
நீயும் இனி ஒரு என் குழந்தை..
உன் வேட்டியில் தொட்டில் கட்ட
சொல்லிக்கொடு,
உன் குரலில் தாலாட்டு பாட
சொல்லிக்கொடு -என் கள்வனே,
உன்னோடு நடக்க வேண்டுமடா!
கால்கள் வலிக்க
வேண்டுமடா!
உன்னால் ஒத்தனம்
கொடுக்கப் பட வேண்டுமடா!!
அவ்வப்போது உன் கைவிரல்
என் வயிற்றில் பதியப் பட
வேண்டுமடா!!
இந்நாள் என் வாழ்வின்
முக்கியமான நாள் என்
அன்பே!!
- SunMuga-
28-10-2014 22.45 PM

முதல் முறை

முடிவுகள் இல்லையடி
உன் மீதான
என் காதலுக்கு
முதல் முறை உன்னிடம்
கேட்கிறேன் ஒரே ஒரு
முத்தம்..
உந்தன் முத்ததின்
மொத்த சிறப்பையும்
அறிந்தது என்
இதழாக மட்டுமே
இருக்க முடியும்
இந்த உலகத்தில்...
நீ என்னோடு இல்லாத
இந்த உலகத்தில்
எப்போதும் எனக்கு
துணையாக இருப்பது
உன் இதழ் மட்டுமே!!
முதல் முறை அதுவும்
ஒருமுறை நீ கொடுத்த
முத்தத்தில் தான்
இன்னும் இருக்கிறது
என் உயிர்;
நீ மறுமுறை கொடுப்பதற்கு..
வறுமையில் நான்
இருக்கிறேன்;
வருத்தம் கொள்ளாதே
முத்தங்கள் அதிகமாக
தான் இருக்கிறது என்
இதழில்....
கனவோடு உன்னோடு
நான் வாழும்
வாழ்க்கை உனக்கும்
எனக்கும் மட்டுமே தெரியும்..
நான் அப்போதே
உன் பெயரை என் பெயரோடு
இணைத்துவிட்டேன்
நீ எப்போது என்னை
அனைத்துக் கொள்ள போகிறாய்!!!
அன்பே!!
ஆட்கள் இல்லாத
இடம் தான் இப்போது
என் போக்கிடம்
கண்ணீர் விடுவதற்கு!!!
-SunMuga-
28-10-2014 21.30 PM

October 27, 2014

புடவை

எனக்கும் ஆசையடா!!
நான் உடுத்திய புடவையில்
உனக்கு ஒரு தொட்டில்
கட்டி தாலாட்டு பாட....

முன்பெல்லாம் கண்ணாடியை
பார்த்து புடவை கட்டுவேன்;
இப்போதெல்லாம்
என் புடவையை உன்
கண்களை காணாமல்
ஒழுங்காய் கட்ட முடிவதில்லை;

அன்பே!!
அம்மா அதிகமாக திட்டுகிறாள்,
ஒரு புடவை கட்ட
இரண்டு மணி நேரமா? என்று,
அவளுக்கு என்ன தெரியும்
நீ என்னோடு இருப்பது..

வீட்டில் அம்மா
இல்லாத நேரங்களில்
உன்னை கட்டி அனைத்து
அனைத்து நானும்
கற்றுக் கொண்டேன்
புடவை கட்ட....

என்னைப் புடவையில்
உன்னைத் தவிர
வேறு எவரும்
பார்த்து விட முடியாது,
புடவை என்ன? நூலால்
நெய்ததா? என்ன
உன் இதழால் அல்லவா!!!

ஒரு சில நாளில்
என் புடைவையின் மீதே
எனக்கு பொறாமை
எழத் தான் செய்கிறது
எனக்கான முத்தத்தை
புடவை பெரும் போது..

சமையல் அறையில்
வடியும் என் வேர்வையை;
உன் கை விரல் தீண்டிய
என் சேலை முந்தானையால்
தொடைத்துக் கொள்கிறேன்;
என்னையே நீ அனைப்பது போல நினைத்துக் கொண்டு..

நீ எப்போதடா மதம்
மாறினாய் ஒரு
கன்னத்தில் கொடுத்தால்
மறு கன்னத்திலும்
கேட்கிறாய் என் முத்தத்தை..

ஒரு வேலை என் உயிர்
பிரிந்தால், இறுதியாக
நீ வாங்கி ந்த புடவையில்
பிரிய வேண்டும், அதன் பின்
உறுதியாக நீ வாங்கி
கொடுத்த முதல் புடவையில்
என்னை நீ தூக்கி செல்ல
வேண்டும் கல்லறை நோக்கி...

-SunMuga-
28-10-2014 20.45 PM

October 25, 2014

கல்லூரி

படிக்கும்போது
எப்போதும்
முதல் மதிப்பெண்
நான் தான் எடுப்பேன்;
முதல் முறை முத்ததின்
மொத்த மதிப்பையும்
பெற வைத்தது நீயாக
மட்டுமே இருக்க
முடியும் இப்பொழுதும்..
பாடத்தை கவனிக்காமல்
எப்போதும் என்னையே
கவனிப்பாய்; நான் அப்போதும்
உன்னையே கவனிப்பேன்..
பரிட்சை பேப்பரில்
பிள்ளையார் சுழி போடுவதற்கு
பதில் உன் இதழையே
வரைய பழகி விட்டேன்
என் அன்பே!!
பாதியிலே பரிட்சையை முடித்து
வந்து பேனாவின் மொத்த
மையையும் உன் மீதே
தெளித்தேன் முத்தமாக...
தேர்வுகளில் நான் தேர்வு
ஆனது என்னவோ உன்
தோளில் சாய்ந்த பிறகு தான்..
கணக்கு பாடத்தை விட
உன் காதல் பாடமே
என்னை அதிகம்
படுத்துதடா!!!
வகுப்பறையின் பலகையில்
சூத்திரம் எழுதுவதற்கு பதில்
சூரியனே உன் பெயரையே
எழுதி வந்தேன் என்னையும்
அறியாமல்....
கல்லூரியின் கோடை
விடுமுறையில் கூட
உன்னால் எனக்கு
குளிர்கிறது என் அன்பே!!
ஆச்சரியத்தோடு நீயும்
கேட்டாய் எப்படி படிக்காமல்
பாஸ் ஆகிறாய் என்று;
நீ படித்ததை தான்
நான் வாங்கி கொண்டேனே
உன் இதழ் வழி,
நீ படித்தால் போததா என்ன?
பலமாய் சிரித்து,
"சீ" போ!!! என்று
வெட்கத்தோடு என்னை
மெதுவாய் தள்ளினாய்...
சுருக்கெழுத்தை இப்போதெல்லாம்
சுகமாய் முடித்துவிடுகிறேன்
பென்சிலை உன் கை விரலாய்
நினைத்துக் கொண்டு..
அய்யோ!! மாட்டிக்கொண்டேன்
என்று நான் நினைத்தேன்,
அப்புறம் தான் தெரிந்தது
நீ தான் என்னிடம்
மாட்டிக்கொண்டாய் என்று;
யாரும் இல்லாத வகுப்பறையில்
நீயும் நானும் இருக்கும்போது..
கல்லூரியின் கணினி
அறையில் கூட உன்
காதலே வேலை செய்கிறது
என் மடையா!!!
மழைக்காக கூட நான்
ஒதுங்கிராத நூலகத்தின்
பக்கம் உனக்காக
ஒடி வந்தேன்,
யாரோ ஒருவன் எழுதிய
புத்தகத்தை நீ
வாசித்துக் கொண்டு இருந்தாய்,
நானும் வாசித்து முடித்தேன்
உன் இதழில் பிரதிபலித்த
வார்த்தைகளின் மூலம்...
கல்லூரியின் கதவை
அடைக்கும் வரை
என்னுள்ளே அடங்கி
மீண்டும் அடம்பிடிப்பாய்
எப்போது பார்ப்போம் என்று..
-SunMuga-
26-10-2014 22.00

October 14, 2014

எச்சில்

காலை, மாலை,
இரவு,பகல் என்று
ஒவ்வொரு கணத்திலும்
கண்ணீரால் நான் அலம்பி
பார்த்துவிட்டேன் ஆனாலும்
கரைய மறுக்கிறது
உன் எச்சில் துளியின் ஈரம்..
என் காதல் மீது
உன்னால் உமிழப் பட்ட
எச்சில் துளிகள்
உளர இன்னும்
எத்தனை காலம் ஆகும்
என்று எனக்கே தெரியவில்லை;

October 13, 2014

பசி

பசி என்ன? பெண்ணே
பசி! உன்னை
ரசிப்பதற்கே வாய்ப்புகள்
அற்ற போது!!

நடுஇரவில் பசிக்கும் போது
உன்னைப் பற்றி
எழுத ஆரம்பித்து விடுகிறேன்!!
அதில் ஏனோ ருசி அதிகம்
என்பதால்!!!

எதிர் எதிரே அமர்ந்து
உன் விழியால்
நீ ஊட்டிய உணவிற்கு
பின் பசி என்பதே
எனக்கு இல்லை..

இப்போதெல்லாம்
பசியோடு படுத்ததும்
உறங்கி விடுகிறேன்!
உன் நினைவை
அனைத்துக் கொண்டு!
உன் மூச்சுக் காற்றை
நான் உள் வாங்கி
கொண்டு!!

பசி என்று
நான் சொன்னவுடன்
எப்போதும் தயாராக
வைத்து இருக்கிறாய்
எனக்கான உணவை-
உன் முத்தம்...

உயிரே இப்போதெல்லாம்
உன் உணவையும் எனக்கே
ஊட்டிவிட்டு என்
முத்தத்தை மட்டும் பெற்றுக்
கொள்கிறாய் ஏன்?

என் பசிக்கு தன் மார்போடு
சேர்த்து பால் ஊட்டியவள்
தாய் என்றால்; என்னை
உன் கண்ணோடு சேர்த்து
காதலை ஊட்டியவள் நீயும்
ஒரு தாய் தானே!!!

என் மீதான காதல்
மொத்தத்தையும் உன்
கண்களிலே வைத்து
இருக்கிறாயே!!!
சிரிக்கும் போதும்,
அழும் போதும்...

எதுவுமே நடக்காத போதும்
எல்லாமும் நடந்ததாய்
நினைத்துக் கொள்கிறேன்
உன் ஒற்றை முத்தத்தில்..

விடிந்து நான் எழுவதற்கு முன்
விவரமாய் குளித்து முடித்து
விடுகிறாய் - அடுத்த அனைப்பிற்கு.,
பட்டிக்காட்டில்
படிகளை கூட தாண்டாமல்
எப்படி கற்று தேர்ந்தாய்
இத்தனை வித்தைகளையும்
என்னை கவர....

பசி எடுத்தாலும்
எனக்காகவே
வீட்டினில் காத்துருக்கிறாய்
பின் எனக்கும்
பசி எடுக்க ஆரம்பித்து விடுகிறது...

நல்ல கவிதை அமைய
நான் வார்த்தைகளை
கோர்ப்பது இல்லை,
மாறாக உன் இதழ்களை
கோர்த்துக் கொள்கிறேன்
என் கண் இமைகளில்...

கள்வா!!
தீராத காதல் மோகத்தில்
நான் உன்னை கட்டி அனைத்தேன்,
ஏனோ கண்ணில் கண்ணீர்
வழிந்தோடியது;
நீ என்னோடு இருக்கும்போது
கண்ணீர் வடிவது விசித்திரமான ஒன்று தான்;
அது ஒரு வேலை உன் கை
விரல் தீண்டுவதற்கு என்
கண்கள் செய்த மாயமாக கூட
இருக்கலாம்...
நீயும் துடைத்து எனக்கு
துணையாக உன் முத்தத்தையும்
கொடுத்துச் சென்றாய் அன்று..

குறுஞ்செய்தியில் கூட
என் இதழ்களையே
குறி வைத்து அனுப்புகிறாயே
உன் முத்தத்தை...

சொட்டுச் சொட்டாக
மருந்துகள் இட்டேன்
என் கண்ணில்;
கண்ணே! நீ இருந்தால்
உன் ஒரு சொட்டு
முத்தம் போதாத? என்ன...

October 8, 2014

முதலில்

கள்வனே!
இறுதியாக நான் போகும்
இடம் கல்லறை என்றாலும்
இப்போதே போக விருப்பமடா!
நீ  என்னோடு இல்லாத
ஒரே காரணத்தால்...

உன் சிரிப்பைப் பார்த்து
ரசித்தவள் நான்,
இப்போதெல்லாம் தானே
சிரிக்கிறேன் வெட்கத்தை விட்டு...

கள்வா!!
நீ ஒன்றும் சொல்லாத
போதும் உன் கண்கள்
ரசித்த உடையையே உடுத்திக்
கொள்கிறேன் என் வீட்டின்
படுக்கை அறையில்...

நீ ரசிப்பதற்காகவே
கலைகள் மிகுந்த
உடையை உடுத்திக்
கொள்கிறேன் - பின்
நீ ருசிப்பதற்காகவே
கலைக்கிறேன்...

நீ வாங்கி வரும்
புதுப்புடைவையை உன்னோடு
சேர்த்தே உடுத்திக்
கொள்ள வேண்டுமடா!!
உன்னோடு உணவு
உட்கொள்வதிலே அதிக
விருப்பமடா!! அதிலும்
இதழ் வழி என்றால்
இன்னும் அதிகமாக!!!!
வார இறுதி நாட்களில்,
இப்போதெல்லாம் எனக்காகவே வெட்டி விடுகிறேன்
உன் விரல் நகங்களை..
அமாவாசை அன்று கூட
நம் வீட்டு ஜன்னல் பக்கம்
நிலா உலா வர ஆசையாம்
நீயும் நானும் இருந்த கோலத்தை ரசித்த பிறகு...
என் சமையல் அறையும்,
உன் அலுவலக அறையும்,
ஒன்று தான் - நான் உன்னை
நினைத்துக் கொள்வேன்,
நீ என்னை நினைத்துக்
கொள்வாய்..நினைவுகள்
நம் மார்பை அனைத்துக்
கொள்ளும்....
அலுவலகம் முடிந்து
தாமதமாகவே நீ வந்தாலும்
சீக்கீரம் ஆரம்பித்து விட
வேண்டுமடா! உனக்கும்
எனக்குமான வேலைகள்
நம் வீட்டினுள்....
என் மார்பில்
பச்சை குத்திக் கொள்ள
எனக்கும் ஆசை தான்!
உன் இதழால்,
உன் இதழாக...

September 23, 2014

பழையது

காலம் முழுக்க உன்னை
ரசிக்கவும்,
உன்னால் ரசிக்கப் படவும்
யாசிக்கிறேன்...
அழைத்துச் செல்வது உன்
அன்னையாக இருந்தாலும்,
நீ அனைத்துக் கொள்கிறாய்
என்னையே உன்
புடவையின் வடிவில்...
நான் கற்பனையையும்
நேசிக்கிறேன்
உன்னை யாசிப்பதால்...
உன் இதழ் முத்தமிட்ட போது
சிறகுகள் இன்றி
வானில் பறந்தேன்,
மறுகனமோ என் விரல்களை  இறுக பிடித்து என்னை
விட்டு போகாதே என்றது
உன் இதழ்கள்...
நம் வாழ்க்கையை
யோசித்தால் மட்டும்,
கண்ணீருடன் சிரிப்பும்
வருகிறது ஏன் என் அன்பே?
எனக்கு புரிந்த கவியே
உன்னை படிக்கும் தருணம்
தான் எப்போது?
ஒவ்வொரு நொடியும்
உன் விழியில் ஊறும் நான்,
உன் விழிகளுக்கு விருந்தாக
அமையும் நாளை கான
காத்திருக்கிறேன் விழித்துக் கொண்டே!!!
துணி  துவைப்பதில் என்ன
சுவாரஸ்யம் என்று கேட்கிறாள்
என் சிநேகிதி - நானும்
சிரித்துக் கொண்டேன்
அவளுக்கு என்ன தெரியும்
உன் மூச்சுக் காற்றின் ஸ்பரிசம்.
வெளியே செல்ல புறப்படும்போது
எனக்கு நானே அழகூட்டினால்
போதும் போதும் என்று
நீ வெட்கப்படுவாய்
ஏன் என்று கேட்டால்
பின் வீட்டிலே இருக்க
வேண்டியது தான் என்பாய்!!

சமையல் அறை

சமையல் அறையில்
மிளகை தேடி நீ அலைந்த
போது தான் நான்
அறிந்தேன் இரவின்
போதை இன்னும்
தெளியவில்லை என்று..

நான் எடுக்கும்போது
உன்னால் கொடுக்கப்பட்ட
ஸ்பரிசங்களை தான் நம்
வீட்டின் சமையல் அறையின்
பாத்திரத்தில் பதிக்கி
வைத்திருக்கிறேன்...

நீ இல்லாத போது
எனக்கென்ன வேலை?
சமையல் அறையிலும்,
குளியல் அறையிலும்,
இறுதியாக உன் காலடி
தடம் பதித்த கதவின்
அருகிலே அமர்ந்து
இருக்கிறேன் உன்னை
எதிர்பார்த்து...

சண்டையிடுவாய் என்று
தெரிந்தும் உனக்கு
பிடிக்காத உணவையே
சமைக்கிறேன் - பின்
என்னால் என் இதழால்
ஊட்டப் பட வேண்டும் என்று..

சமையல் அறையில்
பருப்பின் வாசனைக்கு
பதில் உந்தன் பொறுப்பில்
எழு பட்ட முத்ததின் எச்சில்
வாசனையே படர்ந்து இருக்கிறது...

September 22, 2014

வறுமை

வயிற்றுக்கு உணவு
என்பது போய்,
இப்போது எல்லாம்
பசிக்கு உணவு...

September 20, 2014

சுமித்ரா

நான் இதுவரை எந்தவொரு புத்தகம் பற்றி விமர்சனம் எழுத முற்படவில்லை. ஆனால் என்னவோ இந்த புத்தகம் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
#மரணம்
38 வயதுமிக்க ஒரு குடும்ப பெண் வழக்கமான தன் அதிகாலை  வேலைகளை முடிக்காமலே இறந்துவிடுகிறாள். துக்கம் நிறைந்த வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரை பற்றியும், இறந்தவளுக்கும் அவர்களுக்குமான தொடர்பை விவரிக்கிறது  இந்த நாவல்.
என்னால் ஒரே மூச்சாக படித்து முடிக்க முடியவில்லை. ஏனோ ஒரு பாரம் ஒவ்வொரு பகுதியும் படிக்கும்போது. வெறும் 120 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை மிகுந்த மன பாரத்தில் தான் என்னால் படிக்க முடிந்தது.
மலையாள மொழிப்பெயர்ப்பு மிகச் சிறந்த முறையில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
மரணம் என்றோ ஒரு நாள் எல்லாருக்கும் நிச்சயமாக நடைபெற கூடிய நிகழ்வு தான். ஆனால் மரணத்திற்கு முன் எத்தனை நிகழ்வுகள் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது என்பதை மிக நேர்த்தியான அணுகுமுறையில் எழுத்தாளர் எழுதி இருக்கிறார்.
புத்தகம்; சுமித்ரா
மலையாள ஆசிரியர்; கல்பாட்டா நாராயணன்
தமிழில் ; கே.வி ஷைலஜா

பிற்காலத்தில்

#பிற்காலத்தில்
வயிற்றில்
கருவை சுமப்பவள்
தாய் என்றால்..
பசியை சுமப்பவள் யார்?

கரு

உனக்கும் எனக்கும் திருமணமும் ஆகவில்லை, உடலுறவும் ஆனதில்லை, ஆனாலும் ஒரு குழந்தை இருக்கிறது.. அதோ பார் விளையாடி கொண்டிருக்கிறது. நான் அதன் விளையாட்டை ரசிக்கும் போது என்னைப் பார்த்து சிரிக்கிறது.. சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்கிறது. சில்லறைத்தனமான ஒரு போலிச்சிரிப்பை அதன் மீது எறிய விருப்பமின்றி கண்களால் அதன் விளையாட்டை ரசிக்கிறேன். குழந்தையின் பெயர் காதல்.
ஒரு வேலை நீ என்னை
திருமணம் செய்தால்
என் கருவை தான்
நீ சுமப்பாய் - நான்
உன்னை  கருவாக
என் உடலெங்கும்
சுமப்பேன்...
நீயும் நானும் பேசிக் கொள்ள
வார்த்தைகள் இல்லாத போது தான்
முத்தங்கள் பேசிக் கொள்கிறது..
என் மெளனமான சிரிப்பில்
எத்தனையோ ரகசியங்கள்
இருக்கலாம்.. அது ஒரு வேலை
உன் முத்தமாக கூட!!
குளியல் அறை இல்லாத
வீட்டில் எப்படி குடி இருக்கிறார்கள்
இந்த கணவன் மனைவிகள்..
நீயும் நானும் குளித்த பின்பு
எழுந்த ஒற்றை கேள்வி!!
சில பல இரவுகளில்
நான் உன்னை
நினைத்துக் கொள்வதில்லை,
அனைத்துக் கொள்கிறேன்
இமை முடியில் படர்ந்திருக்கும்
ஈரத்துடன்...
நம் பேச்சுக்கள் இடையே
நான் மெளனமானால்
முத்தம் எதிர் பார்க்கிறேன்
என்று அர்த்தம்,
நீ மெளனமானால்
முத்தம் எதிர் கொண்டுவிட்டாய்
என்று அர்த்தம்...
நீ எப்போதும் பார்த்திராத
என் அறையில்
நான் உன்னை மட்டுமே
எப்போதும்
பார்த்துக் கொண்டு
இருக்கிறேன் எப்படி?
விடியும் போது நிச்சயமாக
இரவு முடிந்து இருக்கும்..
ஆனால் அப்போது தான்
உனக்கும் எனக்குமான
காதல் தொடர்ந்து இருக்கும்...
உன்னுடன் நான் இருக்கும்
கனவில் நினைவுகளை
நினைத்துப் பார்ப்பதில்லை,
நினைவுகளில் உன்
கனவை தவிர வேறு எதுவும்
நினைத்து பார்ப்பதில்லை.
உன்னோடு நான் அமர்ந்த
இடத்தை மறுமுறை
பார்க்கும்போது மிக
அழகாக தெரிகிறது
உன் சிரிப்பின் ஒலியை
நீ தூவி விட்டு சென்றதால்..
கடற்கரை மணலில்
நீயும் நானும் சேர்ந்து
கட்டிய வீட்டின் வறாண்டாவில்
தான் என் பிள்ளைகள்
விளையாடுகிறது...

September 10, 2014

புகைப்படம்

நீண்ட நாட்களுக்கு பிறகு உன் புகைப்படம் பார்த்த நொடியில் உடைபட்ட கண்ணீரால் இனி எந்தவொரு பயனும் இல்லை என்று எனக்கும் தெரியும். இருந்தாலும் யாரும் இல்லா தனிமை அறையில், அறையின் ஓர் ஓரம் அமர்ந்து வடியும்  கண்ணீரால் ஆறுதல் தேடுகிறது மனது.
தொந்தரவு நான் செய்யாத போதும் தொலைபேசி எண்னை நீ மாற்றி விட்டு மற்றவரிடம் நீ நலம் விசாரிக்கும் போது நான் என்ன நினைத்துக் கொள்வது?
இதைவிட என்னை யாரும் இவ்வளவு எளிதாக மட்டம் தட்டிவிட முடியாது.
ஆனால் ஒவ்வொரு நாளும் நான் உன்னோடு பேசிக் கொண்டு தான் இருக்கிறேன் ஒரு சில மெளன வார்த்தைகளில். ஒரு நாளும் நான் மறந்தது இல்லை உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ள.  உன் அலுவலக சாலையை நீ கடக்கும் ஒரு நொடிக்காக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்து உன்னை பார்த்தவன் நான்.
இப்பொழுது ஒரு கனம் யோசிக்கிறேன் என்னால் உன் மனம் புண்பட்டுவிடுமோ என்று. அதனால் என்னவோ உன்னைப் பார்ப்பதை அன்று தவிர்த்தேன். இனிமேலும் தவிர்பேன்..

July 5, 2014

தகரம்

என் வீட்டு தகரத்தில்
நடனமாடும் மழைத்துளியில்
சலங்கை ஒலியாக
தகரத்தின் சத்தம்..
ஒழுகாத இடம் தேடி
அன்றைய இரவை
கடந்திருக்கிறேன்..
யார் அறிவார் அந்த இரவின்
உறக்கம் நிம்மதியானது
என்று...
-SunMuga-
05-07-2014 10.35 PM

June 25, 2014

தேவதாசி

விழி வழி நீ பேசி
காமத்தின் வழியே
அவனை வழியை
வைக்கிறாய்!!
இன்று ஒரு நாள்
நீ வாழ அவன்
வழியை மறித்து
உன் பித்தானை பிரித்து
உன் மடியை விரித்து
வைத்திருக்கிறாய்...
எவனோ ஒருவனின்
காமம் குறைய குறைய
உனக்கு சொந்தமான
பணமும்
கண்ணீரும் கூடுகிறது...
ஒரு வேலை உணவு தான்
டிபன் பாக்ஸ் போல
அதுவும் உடையிலும் உடலிலும்
அடங்கி இருக்கிறது...
அனைவரையும் நீ
பார்த்து
உன்னைப் பார்த்தும்
பார்க்காமல் தவிர்க்கிறார்கள்
ஒரு சிலர்...
மண்ணுக்குள் அடங்கும்
இந்த உயிர்
அடங்குவதற்கு முன்
அறிமுகம் ஆகுமா
சுகவாழ்வு...
-SunMuga -
25-06-2014 23.23 PM

சட்டை

என் அருமை மகளே!

நீ செய்யும் சேட்டையை
உணர்ந்து
சட்டை பிணைந்து இருக்கிறேன்,
என் கால் வலியை
சட்-டே பண்ணாமல்.

நூல்களை பாராமல்
பல நூல்களை கோர்த்துருக்கிறேன்.

நூறாண்டு நீ வாழ
இந்நூலும்,
எந்நூலும்
நிச்சயம் வாழ்த்தும்.

பித்தான் தேர்வு செய்வதற்குள்
பித்தாகவே நான் ஆனேன்.

உன் குளிருக்கு என் மார்பு
போதும் அது என் உயிருக்கும்
மனதுக்கும் போதவில்லை.

உனக்கு சேரும் என்றே
நினைக்கிறேன் - நீயே
உன்னுள் சேர்த்துக் கொள்வாய்
என்றும் நினைக்கிறேன்.

நீயும் வளர - என்
காலில் வலியும் வளர
நானும் வளர்கிறேன்
நல்ல தாயாக!

உடனுக்குடன் என்னோடு
பேசிக் கொள்கிறாய்!!
சில நேரம் என்னை
உதைத்து - பல நேரம் தொப்புள் கொடியை
அணைத்து!

என்னுள் வாழும் உயிரே!
நீயே எனக்கு உயிர்!
நீயும் எனக்கு உயிர்!

என் சிந்தனையை சீர்படுத்துகிறாய்,
என்னுள் நீ இருக்கிறாய் என்று!

அமைதியாகவே போய் இருக்க
வேண்டியவள் -
அமைதி-யாகவே போய்
இருக்கிறாள்.

நீ பிறந்து நான் உயிரோடு
இருந்தால் - அது எனக்கு
மூன்றாவது மறுஜென்மம்
நீ என்னுள் வாழப்போகும்
மூன்றாவது ஜெனனம்..

-SunMuga-
25-06-2014 22.09 PM

June 6, 2014

இன்று

யாரும் இல்லாத தனிமை அறை என்றாலும் சட்டென்று என்னுள் எப்படி புகுந்தது அத்தனை தைரியம். முதல் பார்வையில் மூச்சற்று நான் உன்னில் பார்த்தது உன் அழகா? இதழா? எந்தவொரு பிரமாண்டம் இல்லாத ஒரு நிகழ்வு இந்நாளில் தான் உனக்கும் நினைவிருக்கும் என்று தான் நானும் நினைக்கிறேன். ஆம் நம் முதல் முத்ததின் பிறந்தநாள். என் விழிகளை பார்த்து பேசிக் கொண்டு இருந்தாய் நீ. மறுகனம் தரையை உன் விழி கானும் போது திடீரென உன் இதழில் இதழ் பதித்தேன்.
இது தான் முத்தம் என்று நாமே யூகித்து முத்தமிட்டு கொண்ட தினம் இன்று.
என் குறிப்புகளில் இருந்து.
-SunMuga-
06-06-2014 07.25 PM

May 28, 2014

For you

அன்பு காதலிக்கு,
சின்னஞ்சிறு குழந்தை வெற்றுக் காகிதத்தில் கிறுக்கிய கிறுக்கல் போல தான் என் காதல். ஒரு தெளிவற்ற காதல். என்னைப் பொறுத்தவரை அதுவும் காதல். ஒரு தாய் அதை எடுத்து பத்திர படுத்தி வைப்பதும், பார்த்து பார்த்து ரசிப்பதும் அவளின் அன்பை வெளிப்படுத்துகிறது. என்னைப் பொருத்தமட்டில் நீயும் என் மீது அளவில்லாத அன்பு செலுத்தும் தாய். உன் மடியில் உறங்கும் வாய்ப்பு இது வரை கிடைக்கவில்லை என்றாலும் உன் நினைவோடு உறங்க முற்படுகிறேன் ஒவ்வோரு இரவிலும்.
-SunMuga-
28-05-2014

May 9, 2014

முன்னுரை

சின்னஞ்சிறு குழந்தை தன் பெற்றோர்களோடு கடற்கரைக்கோ, பூங்காவிற்கோ அல்லது சினிமா வளாகத்திற்கோ வரும் போது அது தனியாக ஓட எத்தனிக்கும். அதைப் போல தான் நானும் தவழ கற்றுக் கொண்டு பின் ஓட தொடங்கி என் பெற்றோரை விட்டு வெகு தூரம் ஓடி வந்து விட்டேன். ஆனால் அவர்களின் நினைவுகள் ஒவ்வொரு விநாடியும் என்னுள் ஓடிக் கொண்டே இருக்கிறது.
இது என் முதல் தொகுப்பு. இத்தொகுப்பின் பெயர் "முகா". இது என் பெயரில் இருந்து எடுத்துக் கொண்டேன். பின் ஏன் "முதல் காதலி" என்ற கேள்வி படிப்பவர்களுக்கு எழலாம். ஒருவன் வாழ்நாளில் எதை வேண்டுமானாலும் மறக்கலாம். அவன் முதல் காதலை மறக்க முடியாத ஒன்று. அப்படி யூகித்து தான் எழுத்தின் மீதுள்ள அலாதி காதலால் முதல் காதலி என்று பெயர் சூட்டினேன்.
என்னைப் பற்றியும் என்னை சார்ந்தவர்கள் பற்றியும் அதிகமாக எழுத ஆசை. என்னை விட என்னை சார்ந்தவர்களிடம் அதிக விஷயம் இருக்கிறது. அதை ஒவ்வொன்றையும் தேடிப் பிடித்து மிகத் தெளிவாக எழுத வேண்டும்.
-SunMuga-
12-05-2014

April 28, 2014

Mobile Update

கட்டெறும்பு கடித்தாலும்
காதிலே உன் குரல்

காலை முதல் காத்திருக்கிறேன்
முழுஇரவு வரை பேசிக்கொள்ள

குளிக்காமல் குடி இருக்கிறேன்
நான் குடித்ததையும் மறைக்கிறேன்

பேசி பேசி நீ தொலைகிறாய்
நான் என்ற என்னையும்
நான் தொலைக்கிறேன்..
கைவிரல் வலிக்கிறது
கைப்பேசியை நான் பிடித்து பிடித்து
மின்கலம் குறையும் போது
என் ஆயுளும் குறைகிறது
மெளனம் நான் கொண்டால்
கோபம் நீ கொள்கிறாய்
கோபம் நான் கொண்டால்
மெளனம் நீ கொள்கிறாய்..

நானும் ஆடிப் போய்விட்டேன்
ஆடிக்கு முன் கல்யாணமாம்..

April 13, 2014

பிறப்பு

இன்று மூடி இருக்கும் இந்த கதவின் ஒரு மூலையில் தான் என் வாழ்க்கை பிறந்தது. இது நான் பிறந்த மருத்துவமனையின் நுழைவு வாயில். என் அன்னை எத்தனையோ வலிகளை சுமந்து என்னை ஈன்று எடுத்தது இங்கு தான். என் அண்ணனின் குழந்தை (சஞ்சனா) பிறந்த போது நானும் என் அம்மாவும் இதே மருத்துவமனைக்குள் நுழையும் போது கேட்டேன். நான் பிறந்தது இங்க தானமா என்று. அவள் ஒரு பழைய கட்டிடத்தை கை காட்டி அந்த ரூமில் தான் பிரசவம் பார்த்தாங்கன்னு சொன்னா.. நானும் பார்த்தேன். யாருமே இல்லாத ஒரு கட்டிடம். என் அழு குரல் ஒலித்த இடம். என் தாயின் வேதனையை தாங்கிய இடம். எத்தனை நாள் இருக்க போகிறேன் என்று எனக்கு தெரியாத இந்த உலகத்தில். நான் இருக்கும் வரை என் நினைவில் இருக்கும் இடம் இது.

April 5, 2014

05-04-2014

இன்று ஏனோ ஒரு பாரம் மனதில். ஏன் என்று தெரியுமா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவேளை ரூம் மாறியது ஒரு காரணமாக இருக்குமோ? என்னிடம் நிச்சியமாக பதில் இல்லை. கடற்கரையில் அமர்ந்து இருக்கிறேன். கண்ணீர்விட்டு அழ வேண்டும் போல தோன்றி மறைகிறது.

March 17, 2014

?

நான் என்ற வாழ்க்கை புளிப்பு தன்மையாக இருக்கிறது. நான் ஏன் பிறந்தேன் என்ற கேள்விகள் எல்லாம் என்னிடம் அவ்வப்போது இல்லை. நான் ஏன் வாழ்கிறேன் என்ற எண்ணம் தான் இப்பொழுது. நான் தற்கொலை செய்யும் அளவிற்கு தைரியம் இல்லை. ஆனாலும் நான் சாக வேண்டும்.

February 16, 2014

கிணற்றுப் பேய்

"காஞ்சனை" என்ற பேயின் மீது உள்ள பயம் பற்றிய புதுமைப்பித்தனின் ஒரு சிறு கதை வாசித்தேன். நானும் என் சிறுவயதில் பேயை பற்றிய நிறைய கதைகள் கேள்விப்பட்டு இருக்கிறேன். பின் நாளில் அது உண்மை என்று கூட நம்பி இருக்கிறேன். சரியான வயது ஞாபகம் இல்லை, நான் பள்ளியில் படிக்கும்போது மாப்பிள்ளை சுப்பையா பிள்ளை தெருவில் ஒரு தென்னந்தோப்பு இருந்தது. தென்னந்தோப்பிற்க்கு வெளியே ஆங்காங்கே ஒட்டையான செங்கற்களால்  ஆன ஒரு தடுப்பு சுவர் இருந்தது. அந்த தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் தான் ஏதோ ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று கேள்விப்பட்டு அந்த நாளே தடுப்பு சுவரின் ஓட்டை வழியாக தூரத்தில் தெரியும் கிணற்றை பார்த்தேன்.
அது நடந்து சில நாட்களில் யாரோ ஒரு பெண்ணிற்கு பேய் பிடித்து விட்டது என்று அதே தெருவில் கோடாங்கி அடிப்பதாகவும் கேள்விப்பட்டேன். அன்று முதல் அந்த தெருவில் பகலில் கூட தனியாக பயனிக்க மிகுந்த அச்சமாக இருந்தது.
ஒருமுறை நெல்மூட்டை எடுக்க அந்த தெருவிற்கு போயே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை, தள்ளுவண்டியை தள்ளிய படி நுழைந்தேன்.
ஏதோவொரு துயரத்தில் தூய்மை உள்ளம் படைத்தவள் வாழ்க்கையில் துவண்டு போய் வாழ வழியில்லாமல் தன் சாவின் வழியே தேடிப்போன அந்த கினற்றின் முகப்பு வாயிலை முதல் முறை பார்த்தேன். ஒரு நொடி கூட இல்லை  கண்களை இறுக மூடிக்கொண்டேன் ஏதோ ஒரு பயத்தில்.
இரவுகள் வரும் இரவில் தூக்கமும் வரும். எனக்கு மட்டும் என் வீட்டில் உறங்கும் போது அந்த கினற்றின் நினைவு வரும். எத்தனையோ இரவில் தூங்காமல் தவித்து இருக்கிறேன். அந்த பெண்ணின் ஜல், ஜல் என்று கொலுசு ஒலி. நாய் ஊலை இடும் சத்தம். காதுகளை இறுக மூடிக் கொண்டு அந்த தொய்விலே உறங்கி எழுந்து இருக்கிறேன். இதுவரை என் வீட்டில் யாரிடமும் இது பற்றி நான் பேசியது இல்லை.
யார் என்று தெரியாத ஒரு பெண் அவள். அவளுக்கு என்ன துயரம் என்றும் எனக்கு தெரியாது. ஆனால் எத்தனையோ இரவில் என்னை தூங்கவிடாமல் என் வீட்டை தேடி வந்து இருக்கிறாள்.
இப்பொழுது நினைத்தாலும் பயமாக இருக்கிறது. "ஊஊஊ" என்ற நாயின் ஊலையிடும் சத்தமும், ஜில் ஜில் என்ற கொலுசின் சத்தமும் என் மனதில் நினைக்கும் போது.
-Sun Muga-
16-02-2014 01.25 AM

February 5, 2014

கதை சொல்லும் கடல்

வீசும் காற்றில் விழுந்த
மர இழைக்கும் கிளைக்குமான
காதல் பிரியும் முன்
அவைகள் எப்படி
காதலித்து இருக்கும்?
காதல் ஒன்றும் அத்தனை எளிதான
விஷயம் இல்லை. யாரும் சட்டென்று புரிந்து கொள்ள. காதல் என்பது இதயத்தின் ஓசை. அது கேட்கும் போது நான் என்னை மறந்து இருக்கிறேன். அதை உணரும் போது எல்லைகள் கடந்து இருக்கிறேன். காதலனாக காதலியை வலம் வரும் போது எத்தனை ஆனந்தம். காதலியை கரம் பிடிக்கும் போது எவ்வளவு பொறுப்பு. அவசர உலகில் மிக அவசரமாக காதலில் விழுந்தாலும் காதலுக்கு பின் மிகப்பெரிய பொறுப்பு இருவருக்குமே இருக்கிறது.

January 29, 2014

அம்மா

தனிமையான வாழ்க்கை எனக்கு எத்தனையோ சுகங்களையும், சுதந்திரத்தையும் கொடுத்து இருக்கிறது. வெண்பனி சூழ, நதிநீரில் நீந்திப் போகும் ஒரு நூலிழை போல நானும் சென்னை மக்களோடு பயணிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான ஒரு இலக்குகள் இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள்  இறந்துவிடும் என் உயிருக்கு ஒரு இலக்கும் இல்லாமல் பயணிக்கிறது.
இன்று உடல்நலம் சரியில்லை. சாதாரண காய்ச்சல் தான். உடம்பில்  ஆண்டு முழுதும் வேலை செய்த களைப்பு போன்ற ஒரு உணர்வு. எழ முடியவில்லை. இருந்தும் நேற்று வாங்கி வைத்த மாத்திரையை உன்ன சொல்லி தெய்வத்தின் உத்தரவு. எழுந்தேன். நழுவும் கைலியை கூட பிடிக்க திடம் இல்லை. ஹோட்டலுக்கு நடந்து செல்லும் போது வேகமாக SMS செய்யும்  பெண்களை போல பல் ஆடுகிறது. 60வதை கடந்தவன் போல் கை, கால்கள் நடுங்குகிறது. அப்படியே போய் ஹோட்டலில் அமர்ந்து 4 இட்லி ஆர்டர் செய்தேன்.  சுவை இல்லாத ஒரு இட்லி. காரமான சாம்பர். நம்மை காலி செய்யும் ஒரு சட்னி. சாப்பிட ஆரம்பித்தேன்.
ஒரு நிமிடத்தில் என் மனம் என் வீட்டை நோக்கி பயணித்தது பைசா செலவில்லாமல். ஆம் இந்நேரம் வீட்டில் இருந்து இருந்தால் நிச்சயமாக கடை இட்லி தான். ஆனால் என் அம்மாவின் கையால் ஒரு டம்ளர் வெண்ணி காய வைத்து குடித்து இருப்பேன். அதை தவிர அவளுக்கு வேறு ஏதும் செய்ய முடியாது.
ஒரு கனம் அந்த வெண்ணியை  நினைக்கும்போது கண்ணில் கட்டுப்பாடு இழந்து கண்ணீர் பெருகுகின்றன. வாங்கிய 4 இட்லியில் 3  தான் உன்ன முடிந்தது மீதம் சுவை சரியில்லை என்பதினால் இல்லை, வழிந்தோடிய கண்ணீரால் தொண்டைக்குள் இறங்கவில்லை.
என்னைப்போல எத்தனையோ  மனிதர்கள் இப்படி தான் வாழ்கின்றனர். வாழ்க்கையில் வாழ்வது என்பது மிக கடினம். ஆனாலும் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயம் ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு கோணங்களில்.
-Sun Muga-
29-01-2014 21.50 PM

January 28, 2014

அம்மாவின் சுற்றுலா நினைவுகள்

புதன்கிழமை:

காசியில்.
1. பிர்லா மந்திர்
2. திரிசா தேவி கோவில்
3. துர்கா கோவில்
4. ஹனுமான் கோவில்
5. துளசி மாசை மந்திர்
6. காளி கோவில்
7. காலபைரவர் கோவில்

வியாழன்:

ஹனுமான் காட்
போட் மூலம் சென்று
காசிவிஸ்வநாதர் கோவில்,
அன்ன பூரணி கோவில்,
விசாலாட்சி கோவில்.

வெள்ளி:
புத்தகயா
விஷ்ணு பாதம்
புத்தர் கோவில்

சனிக்கிழமை :
அலகாபாத்
த்ரிவேணிசங்கமம்
ஆனந்த Bhavan

ஞாயிறு :

ரிஷிகேஷ் ராமர் மந்திர்
லஷ்மன ஜ்வாலா
ஹனுமான் மந்திர் கோவில்கள்
ஹரித்வார் மானஸா தேவி கோவில்(ரோப்கார்)

திங்கள் :

சண்டிகர்
ராக் கார்டன் (lack ஏரி)

செவ்வாய் :

சிம்லா ரூஃபி பார்டர்

புதன்:

குருகேஷ்த்ரா
மியூசியம் நிறைய கோவில்கள்

வியாழன் :

அமிர்தசரஸ்
பொற்கோயில், ஜாலியன் வாலாபாக் கோட்டை
வாகா பார்டர்

வெள்ளி: 
கடைகளில் சாமான் வாங்குதல்

சனிக்கிழமை :

குதுப்பினார்
ராஜகாட் ( காந்தி சமாதி )
இண்டியா கேட்,
இந்திரா காந்தி வீடு,
தீன் மூர்த்தி பவன்,
பிர்லா மந்திர் பின்,
அம்பேத்கர் பவன்

ஞாயிறு :

காலை 2 மணிக்கு குளித்துவிட்டு 4 மணிக்கு ஆக்ரா செல்லுதல்.

தாஜ்மகால் பார்த்துவிட்டு ஆக்ரா கோட்டை பின். மதுரா சென்று கிருஷ்ணன் பிறந்த இடம் பார்த்து பொருள்களை வாங்கி பின் ஆக்ரா ரயில் நிலையம் வந்து இரவு 3 மணிக்கு திரும்புதல்.

January 27, 2014

அப்பத்தா

அன்புள்ள அப்பாவுக்கு,

உங்களின் இளைய மகனின் ஒரு கடிதம். எத்தனையோ இரவுகளில் எழுத முற்பட்டு இப்பொழுது நான் எழுதி முடித்த ஒரு சில வார்த்தைகள்.

உலக உருண்டையை உற்றுப் பார்த்தால் சுழற்றி அடிக்கும் ஆழிப்பேரலை கூட நம் கண்களுக்கு தெரிவதில்லை. அப்படிப் பட்ட இந்த உலக இருப்பிடத்தில் என் கண்களில் இருந்து அகல மறுக்கிறது அந்த சின்னஞ்சிறு வீடு.

சாணம் மெழுகிய மண் தரை. வீட்டிற்கு வெளியே இரண்டு திண்ணைகள். மழை பொழிந்தால் வீட்டை நனைக்கும் சரிந்த ஓடுகள். பரன் மேலே அடுக்கி வைத்த விறகு கட்டைகள். ஆங்காங்கே பண ஒலைகள். சொல்லும் படியான பொருள் ஏதும் இல்லாத ஒரு வீடு. ஆனால் மிகப்பெரிய பொக்கிஷம் வாழ்ந்த வீடு தான் அது. அந்த பொக்கிஷம் வேறு யாரும் இல்லை என் அப்பாவின் தாய் தான்.

தன் ரத்தத்தை வேர்வையாக சிந்தி தன் இரண்டு ஆண் பிள்ளைகளை வளர்த்து கொண்டு இருந்தாள். காட்டு வேலை தான் தன் பிரதான தொழில். தொலை தூரம் நடந்தே சென்று வேலைகள் செய்து வந்தாள்.

எனக்கு விவரம் தெரிந்த வரை இரண்டு சம்பவங்கள் தான் நினைவில் இருக்கிறது.

அடமழையில் ஊரோடு எங்கள் ஓட்டு வீடும் நனைந்து கொண்டு இருக்க. வீட்டுக்குள் எனக்காக சுட சுட களிக் கிண்டி, கத்தரிக்காய் தொக்கு வைத்து கொடுத்தாள் என் அப்பத்தா. வெளியில் இருந்த குளிர் காற்றுக்கு சுகம் தருவது போல் ஒரு சூடு அந்த களியில். அதன் பிறகு எத்தனையோ மழைத்துளிகள் ஈரப்படுத்திவிட்டது அந்த மண்ணை. அப்போது அந்த களி எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இப்போது மனம் ஏங்கித் தவிக்கிறது. ஒரு முறை காட்டு வேலைக்கு சென்றவள் வீடு திரும்ப தாமதம் ஆகிவிட்டது. நான் அந்த திண்ணையில் தனிமையில் அமர்ந்து அவளுக்காக காத்துக் கொண்டு இருந்ததாக ஒரு நினைவு.

நம் வாழ்வின் நினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது எத்தனை பெரிய நல்ல உள்ளம் படைத்த அந்த மனுஷியின் கையில் எத்தனை முறை நான் தவழ்ந்து இருப்பேன். எத்தனை முறை என்னை தூக்கி முத்தம் கொடுத்து இருப்பாள், எத்தனை முறை என்னை கான எத்தனித்திருப்பாள், எத்தனை முறை என்னை நினைத்து கண்ணீர் சிந்தி இருப்பாள் என்று இப்போது நினைத்து கொள்கிறேன்.

அவள் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் எப்படி கழிந்து இருக்கும் என்று அவளுக்கு மட்டுமே தெரிந்து இருக்கும். அவள் சோகத்தை யாரிடமும் வெளிப்படுத்தும் குணம் கொண்டவள் இல்லை.

உடல்நலக் குறைவுடன்  படுத்த படுக்கையில் ஆன போது நான் ஒரே ஒரு முறை பார்த்தேன். இப்போதும் அவள் பார்த்த பார்வைகள் என்னை பார்க்கிறது அவள் படுத்து இருந்த திண்ணையை நினைக்கும் போது. திண்ணை என்பது ஒரு வீட்டிற்கு இரண்டு சிறகுகள் போன்றது என்று நான் படித்த ஒரு வரி ஞாபகம் வருகிறது. 

ஆம் உண்மையில் திண்ணை என்பது எத்தனை சுக, துக்கங்களை தாங்கி இருக்கிறது. அவள் படுத்த படுக்கை ஆன போது அந்த திண்ணை தான் அவளை தாங்கிப் பிடித்து இருக்கிறது.

ஒரு நாள் அந்த ஓட்டு வீட்டுக்குள் மாரியம்மன் தெய்வம் ஊஞ்சல் ஆடுவது போல் கனா வந்ததாம் என் அம்மாவிற்கு. அது மாரியம்மா இல்லை, சுப்பம்மாள் என்று நான் சொல்லி இருக்க வேண்டும். நான் சொல்லவில்லை.

-Sun Muga-
27-01-2014 20.00 PM

January 1, 2014

Pizza

வருடத் தொடக்கத்தில்
வாங்கியது என்னவோ
ஆசையோடு;

உண்டது என்னவோ
அளவோடு;

கையிலே எடுக்கும்
அளவு;
வாயிலே வைக்க
முடியவில்லை.

தட்டிலே இருப்பதையும்
அப்படியே வைக்கவும்
மனமில்லை;

ஆசையோடு Pizzaவும்
வாங்கியாச்சு,
வாந்தியும் எடுத்தாச்சு.

-Sun Muga-
01-01-2014 23.43 PM





2014 முதல் கவிதை

லவாப்பழ வண்ணத்தில்
கோலமிட்டு
வரவேற்றாய் புது
வருடத்தை;

நான் இங்கிருந்து
முத்தமிட்டு வரவேற்கிறேன்
உன் புன்னகையை;

உன் வண்ண கோலத்திற்கு
அழகை கூட்ட
நான் என்ன
செய்ய வேண்டும்?

அடைமழை பார்வையை
உன் இடையில்
பொழிய வேண்டுமா?

குடையை பிடித்து
உன்னோடு குளிர்
காய வேண்டுமா?

சொல். அழகே!
குறுக்கம் நெடுக்குமான
கோடுகளை உன் கை
விரல் தீண்டி நானும்
போட வேண்டுமா?

-Sun Muga-
01-01-2014 23.36 PM

2014

01-01-2014. என்னில் பல மாற்றங்கள் உருவாகலாம். இனி ஒவ்வோரு நாளும் எப்படி இருக்கும் என்ற நினைப்புகளும் நெஞ்சில் இடம் பெறலாம். எழுத்து உலகில் என்னை இன்னும் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள ஒரு விருப்பம்.

கவிதை என்றால் காதல். கட்டுரை என்றால் வாழ்க்கை. என் வாழ்க்கையில் கவிதையும், கட்டுரையும் எழுத நிறைய இருக்கிறது. முடிந்த அளவு எழுத முற்படுகிறேன்.

இதற்கு முந்தைய வருடத்தில் இருந்து தான் என் எழுத்து வேலைகளை என் உயிரின் உதவியோடு ஆரம்பித்தேன். இந்த வருடமும் என் உயிரின் உதவி தேவைப்படும் போது கிடைக்கும் நான் என்ன நிலைமையில் இருந்தாலும்.

-Sun Muga-
01-01-2014 23.18 PM